Vanakkam

புதன், 1 டிசம்பர், 2010

தமிழ் டிக்சனரி









http://www.tamildict.com

கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி

கூகுலின் எந்த ஒரு சேவையும் எடுத்துக் கொண்டாலும்
அது நமக்கு மிகவும் பயன்உள்ளதாகத் தான் இருக்கும்
அந்த வகையில் கூகுலின் மெகா தமிழ் டிக்ஸ்னரி பற்றி தான்
இந்த பதிவு. எப்படி இதை பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

படம் 1

http://www.google.com/dictionary இந்த இணையதளத்திற்கு சென்று
படம் 1 -ல் காட்டியபடி “English to <> Tamil ” என்பதை தேர்வு
செய்யவும். அதன் பின் மொழி பெயர்க்க வேண்டிய வார்த்தையை
படம் 2 -ல் காட்டியபடி கட்டத்திற்குள் கொடுக்கவும்.

படம் 2

உதாரணமாக நாம் ” great ” என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ்
மொழிபெயர்ப்பு தேடியுள்ளோம்.நாம் கொடுத்த ஆங்கில வார்த்தையை
எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் ஆங்கில வார்த்தையை
மொழிபெயர்த்து தமிழ் வார்த்தையாக வரிசைப்ப்டுத்தி ( படம் 3 )
நமக்கு கொடுக்கும்.

படம் 3

அடுத்ததாக எந்த வார்த்தையுடன் எல்லாம் இந்த வார்த்தையை
பயன்படுத்தலாம் என்று வரிசையாக (படம் 4 ) தெரியப்படுத்தும்.

படம் 4

அடுத்து நாம் கொடுத்த வார்த்தைக்கு இணையான ( Synonyms ) ஆங்கில
வார்த்தையையும் (படம் 5 )நமக்கு காட்டும்.

படம் 5

இதையெல்லாம் விட சிறப்பு வெப் டெபினிஸன் எப்படி எல்லாம் சேர்த்து
பயன்படுத்தலாம் (படம் 6 )என்று விளக்கமாகவும் கொடுக்கும்.

படம் 6

நன்றி வின்மணி (http://winmani.wordpress.com/2009/12/31/googletamildict/)


பொது அறிவு - 2

1.இந்தியாவின் மிக உயரமான மலைச்சிகரம் எது ?
2.இந்தியாவின் முதல் பொது மருத்துவமனை எது ?
3.நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி எது ?
4.பாராளுமன்றத்தையே சந்திக்காத இந்தியப்பிரதமர் யார் ?
5.ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி அமைந்துள்ள
இடம் எது ?
6.இந்தியாவின் தேசிய விலங்கு எது ?
7.மவுண்ட் குக்சிகரம் எந்த நாட்டில் உள்ளது ?
8.வெட்டுக்கிளியின் ரத்தம் நிறம் என்ன ?
9.போ(po) என்ற நதி எந்த நாட்டில் ஓடுகிறது ?
10.மகாபாரதத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் என்ன ?

பதில்கள்:

1.நந்தாதேவி, 2.சென்னை பொது மருத்துவமனை,3.குற்றாலம்,
4. சரண்சிங், 5.கொடைக்கானல், 6.புலி, 7.நியூசிலாந்து,
8.வெள்ளை, 9.இத்தாலி, 10.ஜெயா.

1.சலவைக்கல் எதிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது ?
2.உள்நாட்டு போக்குவரக்குக்கு அதிகம் பயன்படும் இந்திய
நதி எது ?
3.நாயை விட பல மடங்கு மோப்பசக்தி கொண்ட உயிரினம் எது?
4.பேருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
5.இந்திய மிக நீண்ட கோபுரம் எது ?
6.இந்தியாவின் முக்கிய உணவுப்பயிர் எது ?
7.பாரதிதாசன் நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன ?
8.அதிகமான மாவட்டங்கள் கொண்ட இந்திய மாநிலம் எது?
9.மலேரியா நோயில் எத்தனை வகையுண்டு ?
10.நபிகள் நாயகம் அதிகம் பாசம் வைத்திருந்த அவரது மகள்
பெயர் என்ன ?

பதில்கள்:

1.சுண்ணாம்புக்கல்,2.கங்கை, 3.விலாங்குமீன்,4.கிரிப்டோகிராபி,
5.குதுப்மினார்,6.நெல்,கோதுமை, 7.குயில், நெதர்லாந்து,
8.உ.பி 55 மாவட்டம், 9.3, 10.அன்னை பாத்திமா

1.தக்காளிப்பழத்தின் தாயகம் எது ?
2.தரைப்படை வீரர்கள் கல்லூரி முதலில் அமைந்த இடம் எது?
3.மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று கூறியவர் யார் ?
4.முதன் முதலாக ஜனநாயக முறை தோன்றியது எந்த நாட்டில்?
5.போலியோ மருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
6.குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வதிப்பதில் முதலிடத்தில்
உள்ள நாடு எது ?
7.’தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கியவர் யார் ?
8.கார்பெட் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
9.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன ?
10.நவீன பாரளுமன்ற முறையை உருவாக்கிய இங்கிலாந்து
மன்னர் யார் ?

பதில்கள்:

1.அமெரிக்கா,2.புனே, 3.அரிஸ்டாட்டில்,4.இஸ்ரேல்,
5.ஜோனாஸ் சாக்,ஆல்பர்ட் சாபின்,6.சீனா,7.சி.பா.ஆதித்தனார்,
8.உ.பி, 9.ஜோசப் பெஸ்கி, 10.முதலாம் எட்வட்ர்ட்.

1.நீர்க்கோள் என்று எதை அழைக்கின்றனர் ?
2.இந்தியாவின் முதன் பெண் சுங்க இலாகா கலெக்டர் யார் ?
3.லட்சத்தீவில் பேசப்படும் முக்கிய மொழி எது ?
4.ஹோமோபதி மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
யார் ?

5.குங்ஃபு என்பதன் உண்மையான பொருள் என்ன ?
6.சீனாவின் ஒரு பகுதியாகா ஹாங்காங் எப்போது சேர்ந்தது ?
7.ஒரு சவரன் தங்கத்தில் எத்தனை கிராம் உள்ளது ?
8.பூப்பந்தாட்டம் எந்த நாட்டில் துவக்கப்பட்டது ?
9.தூத்துக்குடியின் பண்டைய காலப்பெயர் என்ன ?
10.பீம் எனப்படும் முதல் பீரங்கி இந்தியாவில் எங்கு
தயாரிக்கப்பட்டது ?


பதில்கள்:

1.பூமி, 2.கெளசல்யா நாராயணன், 3.மலையாளம்,
4.ஹானிமன்,5.ஒய்வு நேரம், 6. 1997, 7.8 கிராம்ட்,
8.இந்தியா,
9.முத்துநகர். 10.ஆவடி.

நன்றி வின்மணி (http://winmani.wordpress.com/2010/10/25/experience/)

Old Version சாப்ட்வேர் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்

புதிய மென்பொருட்கள் மட்டுமல்ல சில பழைய வெர்சன்
மென்பொருட்களுக்கு இன்னும் முக்கியத்துவம் இருந்து கொண்டு
தான் இருக்கிறது. அந்த வகையில் பழைய வெர்சன் ( Old version)
Software எங்கு தேடினாலும் சில சமயங்களில் கிடைப்பதில்லை.
இந்த பழைய வெர்சன் மென்பொருட்களை எப்படி தரவிரக்கலாம்
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

தினமும் புதிது புதிதாக அப்டேசனுடன் வெளிவந்து கொண்டிருக்கும்
மென்பொருட்களுக்கு மத்தியில் சில சமயங்களில் நமக்கு பழைய
வெர்சன் மென்பொருள்கள் சிறப்பாக இருக்கும் இப்படி நாம் விரும்பும்
பழைய வெர்சன் மென்பொருளை தரவிரக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.oldversion.com

இந்ததளத்திற்கு சென்று அடிக்கடி நாம் பயன்படுத்தும்
மென்பொருட்களின் old version -ஐ தரவிரக்கலாம். தனித்தனியாக
ஒவ்வொரு துறை வாரியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. Communication,
Graphics, Multimedia, Internet , File Sharing, Utilities , Security,
Enterprise ,FTP உதாரணமாக Winamp மென்பொருளின் முதல்
வெர்சனான winamp 0.2 version முதல் Winamp 5.24 version வரை
அத்தனையும் இங்கே கிடைக்கிறது இதில் எந்த வெர்சன் வேண்டுமோ
அதை சொடுக்கி எளிதாக தரவிரக்கிக் கொள்ளலாம். புதிய வெர்சன்
(Latest version software) மென்பொருள் சில சமயம் பயன்படுத்துவது
சற்று கடினமாக இருக்கிறது என்று நினைக்கும் நபர்களுக்கு
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி வின்மணி (http://winmani.wordpress.com/2010/11/03/oldversionsoftwares/)


புதிய ஆங்கில வார்த்தையை உதாரணத்துடன் எளிதாக கற்கலாம்

ஆங்கிலத்தை வளர்த்துக்கொள்ள விரும்பும் நபர்களுக்கும் , புதிய
ஆங்கில வார்த்தையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் நபர்களும்
பயனடையும் வகையில் உதாரணத்துடன் புதிய ஆங்கில
வார்த்தையை எளிதாக கற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆங்கில மோகம் கொண்டவர்கள் மட்டுமல்ல அனைவருமே இப்போது
சரளமாக ஆங்கிலம் பேச நினைப்பவர்களும் புதிய ஆங்கில
வார்த்தைகளை கற்றுகொள்ள விரும்புகின்றனர். இதற்காக
புதிய ஆங்கில வார்த்தையை கற்றுக்கொண்டால் மட்டும்
போதுமா அதை சரியாக எங்கு பயன்படுத்த வேண்டும் என்று
உதாரணத்துடன் கூறினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் ஆம்
நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.wordspy.com

இந்ததளத்திற்கு சென்று நாம் புதிது புதிதாக பல ஆங்கில
வார்த்தைகளை கற்கலாம் ஒவ்வொரு வார்த்தைக்கும் சிறிய
விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. Search Word Spy என்ற
கட்டத்திற்குள் நாம் புதிதாக அறிய விரும்பும் வார்த்தையை
கொடுத்து தேடலாம். Alphaphetic வரிசையிலும் நாம் புதிய
வார்த்தையை தேடலாம். புதிதாக சொல்லி இருக்கும் ஆங்கில
வார்த்தையை எங்கு எப்படி பயன்படுத்துகின்றனர் என்ற கூடுதல்
தகவலும் இருக்கும். குழந்தைகளுக்கும் ஆங்கில அறிவை வளர்க்க
விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி வின்மணி (http://winmani.wordpress.com/2010/10/31/learnnewwords/)


எக்ஸல் பார்முலாவை எக்ஸ்பர்ட்டிடம் கேட்கலாம் உடனடி பதில் கிடைக்கும்.

எக்சல் ( Excel) -ல் அடிக்கடி நமக்கு பல சந்தேகங்கள் எழுவதுண்டு,
சாதாரண பார்முலாவில் இருந்து அத்தனையையும் எக்ஸ்பர்டிடம்
கேட்கலாம் உடனடியாக பதில் கிடைக்கும் எப்படி என்பதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.

படம் 1

எக்சல் சிறிய புரோகிரமருக்கு மட்டுமல்ல பெரிய புரோகிராமருக்கும்
அதை விட புரோகிராம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும்
எளிதாக பயன்படுத்தும்படி அமைந்து இருக்கிறது இருந்தும் பல
நேரங்களில் எதற்கு எந்த பார்முலா என்று தெரிவதில்லை இதைப்
போல் நமக்கு எழும் பல கேள்விகளுக்கும் உடனடியாக விடையளிக்க
எக்ஸ்பட் ஒருவர் இருக்கிறார்.

படம் 2

இணையதள முகவரி : http://www.excel-formulas.com

இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி நமக்கு எழும்
கேள்விகளை கட்டத்திற்குள் தட்டச்சு செய்து Get Unstack Now என்ற
பொத்தானை அழுதவேண்டும் அடுத்து வரும் திரையில் Expert Type
பதில் அளிப்பவர்களில் ஒருவரை எந்தத் துறை சார்ந்தவர் என்பதை
தேர்ந்தெடுக்க வேண்டும் (படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது).

படம் 3

தேர்ந்தெடுத்ததை சொடுக்கியதும் Step 3 வந்துவிடும் இதில் நாம்
நம்முடைய இமெயில் முகவரியை கொடுத்து Submit Question
என்ற பொத்தானை சொடுக்கவும் சில நிமிடங்களில் நம் இமெயிலுக்கு
பதில் வந்துவிடும். (படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது) .
Accounting / Finance , Human Resource / Payroll, Inventory ,
Business / Sales , Loans / Wortgages , General Expert
போன்ற அத்தனை துறையில் இருப்பவர்களுக்கும் எக்சலில்
இருக்கும் அத்தனை சந்தேகங்களையும் இங்கு இலவசமாக
கேட்கலாம் கண்டிப்பாக எக்சல் பற்றிய மேலும் அறிந்து கொள்ள
விரும்பும் நபர்களுக்கு இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி வின்மணி (http://winmani.wordpress.com/2010/10/30/excelformula/)


பொது அறிவு - 1

1.மத்தியப்பிரதேசம் மன்னாவில் கிடைக்கும் கனிமம் எது ?
2.வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் மிகப்பெரியது எது ?
3.ரஷ்யாவின் பாராளுமன்றத்தின் பெயர் என்ன ?
4.கங்கை நதி கடலில் வந்து சேரும் இடத்தின் பெயர் என்ன ?
5.ஸ்புட்னிக் என்பது என்ன ?
6.புகழ் பெற்ற லிங்கராஜா ஆலயம் எங்குள்ளது ?
7.தானியங்கி விமானத்தை கண்டுபிடித்தவர் யார் ?
8.காந்தியடிகள் கலந்து கொண்ட வட்ட மேஜை மாநாடு எது?
9.” கலிங்க நாட்டின் “ இன்றைய பெயர் என்ன ?
10.கானுவா போரில் பாபர் யாரைத் தோற்கடித்தார் ?

பதில்கள்:

1.வைரம், 2.ப்ரோடிட்,3.சுப்ரீம் சோவியத்,4.நவகாளி,
5.செயற்க்கைக்கோள்,6.புவனேஸ்வர்,7.ஸ்பெர்ரி,
8.இரண்டாவது வட்ட மேஜை மாநாடு, 9.ஓரிஸ்ஸா.
10.ராணா சங்கர்.

1.இங்கிலீஸ் கால்வாயை முதன் முதலில் கடந்த ஆண் யார் ?
2.அமெரிக்க முதல் செயற்கைகோளை எப்போது விண்ணில்
ஏவியது ?
3.வினிகரின் வேதியல் பெயர் என்ன ?
4.இந்தியாவின் பூங்கா நகரம் என அழைக்கப்படுவது எது ?
5.வாட்டிகன் நகரத்தின் சிறப்பு பெயர் என்ன ?
6.கண்ணை குருடாக்க கூடிய பாக்டீரியா எது ?
7.உலகிலேய மிகப்பெரிய நூல் நிலையம் எங்குள்ளது ?
8.மிகவும் பழமையான மதம் எது ?
9.மிளகு அதிகம் கிடைக்கும் மாநிலம் எது ?
10.பறவைகளில் வேகமாக பறக்ககூடியது எது ?

பதில்கள்:

1.கேப்டன் வெப்,2.1958 ,3.அசிடிக் அமிலம்,4.பெங்களூர்,
5.புனிதப் பார்வை, 6.சுடோமோனஸ்,7.மாஸ்கோ,
8.இந்து மதம், 9.ஆந்திரா. 10.கழுகு.

1.மண் ஆய்வுக்கூடம் தமிழ்நாட்டில் எங்குள்ளது ?
2.பரிணாம வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் யார் ?
3.பெர்முடா முக்கோணம் எந்தக்கடலின் ஒரு பகுதியில் உள்ளது ?
4.கற்பகவிநாயகர் கோவில் கொண்டிருக்கும் ஊர் எது ?
5.ரயில்வே சிக்னலை கண்டுபிடித்தவர் யார் ?
6.பிரெஞ்சு நாட்டு காந்தி எனப்படுபவர் யார் ?
7.சிறந்த செய்தி மற்றும் சாக்குமெண்டரி படங்களுக்காக
அமெரிக்கா வழங்கும் விருது எது ?
8.எர்த் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
9.பவானி சாகர் அணைக்கட்டு எந்த மாவட்டத்தில் உள்ளது ?
10.மேகங்களைப் பற்றிய ஆய்வுத்துறை எது ?

பதில்கள்:

1.குடுமியான் மலை, 2.சார்லஸ் டார்வின்,3.அட்லாண்டிக்,
4.பிள்ளையார்பட்டி,5.ஹால்,6.சார்லஸ் டிகாலோ,
7.எம்மி விருது, 8.எமிலி ஜோலா,9.ஈரோடு.10.நேபாலஜி

1.ரக்பி ஆட்டத்தை கண்டுபிடித்தவர் யார் ?
2.தலைமை நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயது என்ன ?
3.இசைக்கலைஞர் தான்சேனை ஆதரித்தவர் யார் ?
4.குடைவரைக் கோவில்களை முதலில் கட்டிய மன்னன் யார் ?
5.ஆளுநரின் பதிவிக்காலம் எவ்வளவு ?
6.கிளியோபாட்ரா எந்த நாட்டின் இளவரசி ?
7.டெல்லி சலோ என்று முழங்கியவர் யார் ?
8.ராமானுஜரின் கோட்பாடு என்ன ?
9.சாக்லேட் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
10.வியட்நாமின் தலைநகரம் எது ?

பதில்கள்:

1.வில்லியம் வெப்எல்லிங், 2.65,3.அக்பர்,
4.மகேந்திரவர்மன்,5.5 ஆண்டுகள், 6.எகிப்து, 7.நேதாஜி,
8.துவைதம்,9.கொக்கோ விதைகளில் இருந்து.10.ஹனோய்

1.தமிழ்நாட்டின் முதல் சபாநாயகர் ?
2.புறா வாழாதப் பகுதி எது ?
3.ஹார்மோன் இல்லாத உயிரினம் எது ?
4.அக்பர் சமாதி எங்கே உள்ளது ?
5.1944-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி
பெற்ற நாடு எது ?
6.சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும் ?
7.விதையின்றி இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது ?
8.முதன் முதலில் மின்கலத்தை உருவாக்கியவர் யார் ?
9.மியான்மர் என்று அழைக்கப்படும் நாடு எது ?
10.உலகிலேயே அதிகமாக தேன் உற்பத்தி செய்யும் நாடு எது?

பதில்கள்:

1.கோபால மேனன், 2.அண்டார்டிகா,3.பாக்டீரியா,
4.சிகந்திராபாத்,5.பிரேசில், 6.96, 7.மைசீலியம்,
8.ஜார்ஜ் வோல்ட்டா, 9.பர்மா. 10.அமெரிக்கா

1.நாதஸ்வரம் எந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
2.நீராவி எஞ்சினை கண்டுபிடித்தவர் யார் ?
3.பெரிலியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தவர் யார் ?
4.நீரில் கரையும் உயிர்சத்து எது ?
5.நாகேஷ் புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படம் எது ?
6.கந்தக அமிலம் தயாரிக்கும் முறையின் பெயர் என்ன ?
7.ரூப் ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் ஆற்றுப்பள்ளதாக்கு
எது ?
8.உருது ஆட்சி மொழியாக உள்ள இந்திய மாநிலம் எது ?
9.ஜப்பான் நாடு எந்த கண்டத்தில் உள்ளது ?
10.தங்கத்தை விட பலமடங்கு விலை உயர்ந்த உலோகம் எது?

பதில்கள்:

1.ஆச்சா எனும் மரம், 2.ஜேம்ஸ் வார்ட்,3.எல்.வாக்யூலின்,
4.வைட்டமின் C,5.திருவிளையாடல், 6.பரிச முறை,
7.தாமோதர், 8.ஜம்மு காஷ்மீர், 9.ஆசியா. 10.யுரேடியம்.

நன்றி வின்மணி
http://winmani.wordpress.காம்

அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி

ஆங்கில வார்த்தைக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல மொழிகளில்
ஆன்லைன் மூலம் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் துறைவாரியாகவும்
தனித்தனியாகவும் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு

பொதுவாக டிக்ஸ்னரி என்று எடுத்துக்கொண்டால் ஆங்கில
வார்த்தைக்கு இணையான தமிழ் , ஆங்கிலம், ஹிந்தி , மலையாளம்
என்று தனித்தனியாக டிக்ஸ்னரி கிடைக்கும் ஆனால் ஒரு ஆங்கில
வார்த்தைக்கு 67 மொழிகளில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் டிக்ஸ்னரி
ஒன்று உள்ளது.

இணையதள முகவரி : http://dicts.info

ஆங்கில வார்த்தைக்கு எந்த மொழியில் அர்த்தம் தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு Search என்ற
பொத்தானை அழுத்தினால் போதும் உடனடியாக நமக்கு விளக்கம்
கிடைத்துவிடும் ஏதோ தேடினோம் கிடைத்தது என்று இல்லாமல்
விளக்கமாக அந்த வார்த்தையுடன் இணைந்த பல வார்த்தைகளையும்
சேர்த்தே தேடுதல் முடிவு கிடைக்கிறது. முகப்பு பக்கத்தில் எந்த துறை
சம்பந்தமாக தேட விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்
வசதியும் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த டிக்ஸ்னரி
பயன்படுத்தும் வண்ணம் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

நன்றி வின்மணி

http://winmani.wordpress.com/2010/11/14/languagedicts/

வியாழன், 30 செப்டம்பர், 2010

ஜஸ் ஸ்டிக் போட்டோ பிரேம்















தேவையான பொருட்கள்:-














ஜஸ் குச்சி - 16
பசை
போஃம் டிசைன்ஸ் (அல்லது)
பெயின்ட்

செய்முறை:-



@.முதலில் 9 குச்சிகளை அடுக்கவும்.












@.அதன் மேல் குறுக்காக ரெண்டி குச்சி ஒட்டவும்













@.பின் நேராக இரண்டும், குருக்காக இரண்டும் ஒட்டவும்












@.ஒரு குச்சியை 1 இன்ச் அளவு வளைத்து அதை பின் பகுதியில் ஒட்டவும












@.பின் மேலே அழங்கரிக்கவும்.













@.குழந்தைகள் கூட எளிதில் பன்னிவிடுவார்கள்



















நன்றி

கொழுக்கட்டை

தேவையானப்பொருட்கள்:

வருத்த அரிசிமாவு - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 1/2கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
ஏலக்காய் - 4 பொடி செய்தது
எண்ணைய் - 2 முதல் 3 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்


செய்முறை:
பூரணம்:

#.வெல்லத்தை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வடிகட்டு அதை கொதிக்க விடவும்.



#.அதில் துருவிய தேங்காய் , ஏலக்காய் தூள் போட்டு வதக்கவும்.


#.பூரணம் சுண்ட வந்ததும் இறக்கி ஆரவிடவும்.


மேல் மாவு:-

#.தண்ணீர் கொதித்ததும் அதில் கொஞ்சம் உப்பு போட்டு பின் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கரண்டியால் கட்டி தட்டாமல் கிளரி இறக்கிவிவும்.

#.சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து கை பொறுக்கும் சூடு வந்தவுடன் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்


#.கையில் கொஞ்சம் எண்ணெய் தடவி கொழுக்கட்டை அச்சை உபயோகப் படுத்தியோ அல்லது மாவை கிண்ணம் போல செய்து அதில் பூரணத்தை வைத்து எல்லா பகுதியையும் இணைத்துவிடவும்.




# ஆவியில் 10 முதல் 15 நிமிடம் வரை வேகவிடவும்


#. கொழுக்கட்டை தயார்.


நன்றி

ஒப்பிட்டு

தேவையானப் பொருட்கள்:-

மைதா மாவு – 1 கப்
ஏலக்காய் பவுடர்– 1 tsp
சர்க்கரை – 3/4
தேங்காய் துருவல்- 3/4 கப்
உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

@.ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, 1 tsp எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும்.













@.ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஏலக்காய் பவுடர் ,சர்க்கரை ,தேங்காய் துருவல் உடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு வதக்கவும்.... இது உள்ளே வைக்கும் புரணம்.










@.பிசைந்து வைத்த மைதா மாவை உருண்டைகளாக உருட்டி அதை சப்பாத்தியாக தேய்த்து அதில் பூரண உருண்டையை வைத்து நன்கு மூடி மீண்டும் தேய்க்கவும்

@.தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் செய்து வைத்துள்ள ஒப்பிட்டு போட்டு வேக விடவும்.








@.ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு திருப்பி போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வேக விடவும்

@.சுவையான ஒப்பிட்டு தயார்.

நன்றி

ஈஸி கேசரி



ஈஸி கேசரி

தேவையானப்பொருட்கள்:

ரவா - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 4 tsp
முந்திரிப்ப‌ருப்பு - 10
திராட்சை - 10
ஏல‌க்காய் பொடி - 1/4 tsp
கேச‌ரி க‌ல‌ர் -சிறிது

செய்முறை:

ஒரு வாண‌லியில் 1 tsp நெய்யை விட்டு, அதில் ர‌வாவைப் போட்டு வாச‌னை வ‌ரும் வ‌ரை வ‌றுத்து எடுத்து த‌னியாக‌ வைத்துக் கொள்ள‌வும்.

அதே வாண‌லியில் சிறிது நெய்யை விட்டு, முந்திரி, திராட்சை ஆகிய‌வற்றை‌யும் வ‌றுத்து எடுத்து வைத்துக் கொள்ள‌வும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும் அதில் கேசரி கலர் கலந்துவிடவும்

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும்

ரவா எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்துக் கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்

நன்றாகக் கிளறிய பின் நெய் சேர்த்து மீண்டும் கிளறவும்.

கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

நன்றி கதம்பம் ப்ளாக்

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

தேன்.. தேன்.. தித்திக்கும் தேன்..


Print E-mail

தேன்.. தேன்.. தித்திக்கும் தேன்..

மலைத்தேன்.. காட்டுத்தேன்...

அழகுக்கு அழகு சேர்க்கும் தேன்...

நோயை விரட்டும் தேன்...

தேன்.. தேன்.. தித்திக்கும் தேன்..

பாடும்போதே நாவினிக்கிறதல்லவா?

ஆம்!

''தேன் என்று சொன்னாலே நாவெல்லாம் தித்திக்கும்.

தேனால் நாம் அடைகிற நன்மைகளைச் சொன்னால் மனசெல்லாம் பூரிக்கும்''.

அப்படி என்ன விசேஷம் தேனில் என்று கேட்கிறீர்களா?!

தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் சுத்தமான தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால், எந்த வியாதியும் நமக்கு வராது.

01 உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

02 தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

03 தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

04 தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

05 இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

06 தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

07 உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

08 தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

09 மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

10 கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

11 வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

12 தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

13 அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

14 அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

15 முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

16 தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

17 ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.

18 அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

19 நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

20 என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

21 சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

22 நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

23 ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இன்ஷா அல்லாஹ், நிச்சயம் குணம் காண்பார்கள்.

24 மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

25 படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

26 ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.

27 நூற்றிருபது (120 ) கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும்.

28 நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.

29 சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள்,

இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள்,இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு,

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது.

30 ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

31 இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

32 காதில் ஞொய் என்று சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறதா? மருந்து கடையில் கடுகு எண்ணெய் விற்கிறார்கள். இதைஒரு பாட்டில் வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை, ஒரு கரண்டியில் எடுத்துக் கொண்டு சூடாக்குங்கள். இலேசான சூடுபோதும். இரைச்சல் கேட்கும் காதில் இரண்டு சொட்டு விடுங்கள். சப்தம் வருவது நின்றுவிடும்.

33 குழந்தை அடிக்கடி பால் கக்குகிறதே, இது நோயா? இல்லை. வயிற்றுப் பொருமலினால் குழந்தை பால் கக்குகிறது. குழந்தைக்கு இதனால் கெடுதல் இல்லை. குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரத்தைத் திரவ ரூபத்தில் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சம் கெட்டியாகக் கூழ் போல் கொடுங்கள்; பால் கக்காது.

34 குழந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்கும். தேன் ஓர் அற்புதமான மருந்து, பெண்களிடத்திலுள்ள மலட்டுத்தனத்தைத் தேன் போக்கி விடுகிறது.

35 தோல் தோய்ந்து போய் சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விட்டது என்ற கவலை உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். அதற்கான அட்டகாசமான நிவாரணம் உள்ளது.

இரண்டு முட்டைகளை உடைத்து அடித்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் பால், கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் சிறிய குளியல் சவற்கார துண்டுகளை போடவும்.

ஷாம்பு மாதிரி நுரை வரும். இந்த எண்ணெயை உடம்பு முழுவதும் தேய்த்து அலசுங்கள். வாரம் இருமுறை செய்தாலே போதுமானது. தோல் சுருக்கம் ஓடிப்போவதுடன் தோலுக்குத் தேவையான புரத சத்துக்களும் கிடைக்கும்.

மேலும், சவற்கார உடலை சுத்தமாக்கும், எண்ணெய்கள் தோலை இறுக வைக்கும். மேனி மிளிரும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இதன்படி செய்தாலே போதுமானது உங்கள் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் உணர முடியும்.

நன்றி www.nidur.info/



உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய்: தலைவலி!

உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர்.

ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும்,

ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும்.

ஒரு சிலருக்கு காலையில் வரும்.

ஒரு சிலருக்கு மாலையில் வரும்.

ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும்.

ஒரு சிலருக்கு இருபுறமும் வரும்.

ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும்.

ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும்.

ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும்.

ஒரு சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும்.

ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும்.

ஒரு சிலருக்கு பனியில் நடந்தால் வரும்.

ஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும்.

ஒரு சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும்.

ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும்.

ஒரு சிலருக்கோ எப்ப வரும்? எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும்.

வந்தால் மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்-கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.

நோய்க் காரணம்: தலைவலி கீழ்கண்ட ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக வரலாம்.

1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglyceamia): உண்ணும் உணவில் சர்க்கரை அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும். இதனால் மூளையின் செயல்பாடுகள் குறையும். அப்பொழுது அதிக அளவு இரத்தம் மூளைக்கு செல்லும் நிலை ஏற்படும். அதன் காரணமாக மண்டையின் உள்புற இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் தலைவலி உண்டாகும்.

2. அதிக இரத்த அழுத்தம் (Hypertension): இதிலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் விதமாக இரத்தக் குழாய்கள் விரிவடையும். இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளும் இரத்தக் குழாய்-களை விரிவடைய செய்யும். அதனால் உள்மண்டை இரத்தக் குழாய்களும் விரிந்து தலைவலி ஏற்படும்.

3. இரத்தக் குழாய் நோய்கள (
Vascular Disease): நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம் போன்றவற்றில் இரத்தக் குழாயில் உப்பு, சர்க்கரை படிவங்கள் படிவதால் இரத்தக் குழாய், சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. அதனால் தலைவலி வரலாம்.

4. மன அழுத்தம் (Mental Tension): மன அழுத்த நோயிலும் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன்பின் விளைவாக தலைவலி வரலாம்.

5. உள்மண்டை இரத்தக்கட்டு (
Oedeama - Intra Cranial): தலையில் அடிபடுவதால் உள்மண்டையில் இரத்தம் கட்டி, அது மூளையின் பகுதிகளை அழுத்துவ-தால் தலைவலி வரலாம்.

6. மூளைக் கட்டிகள் (Intra Cranial Tumous): மூளையில் உண்டாகும் கட்டிகள் மூளையையும், சுற்றியுள்ள இரத்தக் குழாய்களையும் அழுத்தும் தன்மை உடைய-தால் தலைவலி உண்டாகும்.

7. கண்பார்வைக் கோளாறுகள் (Refractive Errors): பெரும்-பாலோருக்கு தலைவலி ஏற்படும் முக்கிய காரணம் பார்வை கோளாறுகளேயாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் கண்களை அதிக அளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது தலைவலியை அதிக அளவு உண்டாக்கும். பார்வை நரம்புகள் மய்யம், மூளையின் பின்புறம் உள்ளதால், பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் தலைவலி பெரும்பாலும் பின் மண்டையில் ஏற்படும் வாய்ப்பு அதிகம்

8. முகக் காற்றறை அழற்சி (Sinusitis) : சளி ஏற்படும் பொழுது காற்றறை அழற்சி ஏற்படும். சிலருக்கு தூசுகளால் அழற்சி ஏற்படும். இதில் மிகவும் அதிகமாக மேல்தாடை காற்றறை பாதிக்கப்-படும். இதனாலும் தலைவலி உண்டாகும். இது பெரும்பாலும் நெற்றி, பக்கவாட்டில் தலை-வலியை உண்டாக்கும். காற்றறைத் தலைவலி என்றே இதை கூறுவர்.

9. பல்நோய்கள் (Dental Diseases): சரியாக முளைக்காத மூன்றாம் கடைவாய் பல் தலையின் பக்க-வாட்டில் உள்ள சதைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் பக்கவாட்டில் தலைவலி ஏற்படும்.

10. ஒற்றைத் தலைவலி (Migrane): மிகவும் கடுமையான வலியான இது பெரும்பாலும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்படும். சிலருக்கு தலைமுறை வியாதியாக வரலாம். கழுத்திலும், தலைக்குச் செல்லும் இரத்த குழாய்கள் மன அழுத்தத்தால் விரிவடையும் இதனால் வலி ஏற்படும்.

மருத்துவர்கள் தலைவலியை வேறு வகையாக வகைப்படுத்துகின்றனர்.

1. இரத்தக் குழாய் தலைவலி (Vascular Headache)

2. உள்மண்டை மிகு அழுத்தத் தலைவலி (Increased Intra Cranial Tension)

3. மூளை உறை அழற்சி, மூளை அழற்சி (Inflamation)

4. தசைச் சுருக்கம் (Muscle Spasm)

5. பிற இடங்களில் இருந்து பரவும் தலைவலி (Referred Headache)

என மருத்துவரகள் தலைவலியை பாகுபடுத்தினாலும், தலைவலி நாம் ஏற்கனவே சொன்ன 10 காரணங்களில் ஒன்றால்தான் வரும். அவை மருத்துவர்களில் பாகுபாடுகளில் உள்ளடங்கியதாக இருக்கும்.

மேற்கூறிய காரணங்களால் மண்டையின் உள்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. எலும்பின் கட்டித் தன்மையால் ஓரளவிற்கு மேல் விரிவடைய முடியாததால் தலைவலி ஏற்படுகிறது. ப்ளுகாய்ச்சல், மூளை அழற்சி, மூளை உறை அழற்சி ஆகியவற்றில் மண்டையின் இரத்தக் குழாய் விரிந்து தலைவலி ஏற்படுத்தும். மலைப் பகுதிகளின் உயரம், பசி, இரத்தச் சோகை, மிகு இரத்த அழுத்தம் போன்றவையும் உள் மண்டை இரத்தக் குழாயில் விரிவை உண்டாக்கி தலைவலி ஏற்படுத்தும்.

மருத்துவம்: தலைவலி பெரும்பாலும் ஒரு நேரடியான நோய் இல்லை. எனவே தலைவலி என்றாவது ஒரு நாள் வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதுவே ஒரு தினசரி தொல்லையாகும் பொழுது, கட்டாயம் வேறு நோய்கள் ஏதேனும் இருக்கும். பல நேரங்களில் தொடர்ச்சியான தலைவலிக்கு சோதிக்கும் பொழுது, வேறு சில நோய்கள் இருப்பது தெரியவரும். அதனால் தலைவலிதானே என்று அலட்சியப் படுத்தாமல், சரியான சோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.

தலை வலிக்கும் பொழுது வலி மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் இருப்பவர்களே அதிகம். இது தவறான பழக்கம்.

தலைவலி அடிக்கடி வந்தால் அதன் அடிப்படை மூலகாரணம் என்னவென்று ஆய்ந்து, அதற்கான மருத்துவம் செய்து கொண்டாலே தலைவலி தானே சரியாகி விடும்.

எடுத்துக்காட்டாக பார்வைக் கோளாறால் வரும் தலைவலி, பார்வைக் கோளாறை சரி செய்வதால் சரியாகிவிடும்.

அதேபோல் ஒற்றைத் தலைவலி சரியான மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

சரியான ஆய்வுகளும், சரியான மருத்துவமும் செய்து கொண்டால், தலைவலி நமக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

www.nidur.info


சனி, 24 ஜூலை, 2010

பல நோய் தீர்க்கும் கரிசலாங்கண்ணி


பல நோய் தீர்க்கும் கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.

மஞ்சள் காமாலைக்கு:
கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப்பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.

மகோதர வியாதிக்கு:
கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்துச்சாரெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். உப்பில்லாப்பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.
மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.

ஆஸ்துமா குணமாக: கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.

சிறுநீர் எரிச்சல், பெண்களின் பெரும்பாடு நோய் நீங்க: கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கத்திற்கும் கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.

பெண்களின் பெரும்பாட்டு நோய்க்கு கரிசலாங் கண்ணிச்சாறு நல்ல பலன் அளிக்கும்.

குழந்தைகளின் சளி நீங்க:
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

கரிசலாங்கண்ணித்தைலம்:
கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.

இரத்தசோகை நீங்கி நல்ல ரத்தம் உண்டாக:
இரத்தசோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி ஒரு பங்கும், வெல்லம் இரண்டு பங்கும், எள் ஒரு பங்கு வீதம் தேவைக்கு ஏற்ப சேகரித்து வைத்துக் கொண்டு, வெல்லத்தைப் பாகாக்கி மற்ற இரண்டு பொருள்களையும் பொடி செய்து சேர்த்துக் கிண்டி, கேக் வடிவில் தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்ல ரத்தம் உண்டாகும்; நினைவாற்றல் அதிகரிக்கும்.


கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.

தலைமுடி நன்கு வளர:
கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணி இலைச் சூரணமும், ஜாட்டை கரந்தை இலைச் சூரணமும் சமம் கலந்து தேவையான அளவிற்கு வைத்துக்கொண்டு அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இரண்டு மாத உபயோகத்தில் இளநரை மாறி விடும்.

கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.

தலைப்பொடுகு நீங்க:
கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.

பல் உறுதிக்கு!
கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.

பித்தத்தைலம் :
கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து தைலமாய் எரித்து, பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி விடும். நல்ல தூக்கம் வரும். கண் நோய்கள், காது நோய்கள் ஒற்றைத் தலைவலி முதலியன நீங்கிவிடும்.

நரை நீக்கும் தைலம்:
புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொணடு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால், இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.

நாள்பட்ட புண் ஆற...
கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.

நன்றி http://tamilcnn.com/

பிணி தீர்க்கும் மஞ்சள்


பிணி தீர்க்கும் மஞ்சள்
பெண்கள் திருமணம் முடிந்தபின், மஞ்சள் பூசுவதும், மாங்கல்ய கயிற்றுக்கு மஞ்சள் பூசுவதும், மஞ்சளால் தயாரிக்கப்பட்ட குங்குமத்தைத் திலகமிட்டுக் கொள்வதும், கணவன் இறக்கும்வரை ஒரு பண்பாட்டுச் செயலாக வாழ்வதும் எத்தனை புனிதமான இடத்தில் மஞ்சள் உள்ளது என்பதையே காட்டுகிறது. இத்தனை சிறப்புப் பண்புகளைப் பெற்ற மஞ்சள், உணவுப் பொருளாகவும், உணவுப் பொருளுக்கு சுவை, மணம் தருவதுடன், உணவுப் பொருள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பும் தருகிறது.


மஞ்சளை மருந்தாக ஒவ்வொரு வீட்டிலும் நடைமுறைப்படுத்தினார்கள். தேர்ந்த மருத்துவர்கள் மஞ்சள் கலந்த மருந்து மூலம் எத்தனை கொடிய நோய்களையும் போக்கி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளனர். குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமும், சந்தேகமும் இல்லாமல் பயிற்சியும் இல்லாமல் மஞ்சள் மூலம் பல பிணிகளைப் போக்க முடியும். மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.


கெடுதல் செய்யும் கிருமிகளையும் அழிக்கிறது. பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும். பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கலுக்கு உள்ளுக்கு மஞ்சள் பொடி சாப்பிடுவதால், நல்ல பலன் கிடைக்கிறது. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.


மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும். மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம். குடல் நோய் எதுவாக இருந்தாலும், மஞ்சள் சூரணம் உட்கொண்டால், விரைவாகவும், நிரந்தரமாகவும் நோய் தீரும். மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல், துர்நாற்றத்தைப் போக்கிவிடும். மேலும், வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.


மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர்களை வெளியேற்றிவிடும். மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி துர்நாற்றத்தை நீக்கும். மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்துவிட்டால் அனைத்து வகையான வைரஸ் கிருமிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும். மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுப்பதால், தொற்றுக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.


மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்கும். மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேக ரணம், மேகப் படைகள், வட்டமான படைகள், விஷக்கடிகள் நீங்கும். தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும். மஞ்சளை இலுப்ப எண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும். மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக இழுத்தால், தலைவலி நீங்கும். மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, ரணங்களுக்கும் புண்களுக்கும் போட்டால், சீக்கிரத்தில் ஆறாத ரணங்கள் ஆறும்.


மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும். மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும். அடிபட்ட புண்ணுக்குப் போட, சீக்கிரம் புண்கள் ஆறிவிடும். மஞ்சளும், நெல்லிப் பொடியும் சமமாகக் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும். அடிபட்ட வீக்கம், ரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போடுவதால், ரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைகிறது. புகழ்பெற்ற, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புத்தூர் எலும்பு முறிவு சிகிச்சைக்கு கட்டுப்போடும் மருந்தில், மஞ்சள் முக்கியமான பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.


மஞ்சள் மங்கலகரமானது. உணவு மூலம் சேர்ந்தால், பல பிணிகள் நீங்கிவிடுகின்றன. மஞ்சளின் மருத்துவ குணத்தை உணர்ந்து, எளிய முறையில் பணச் செலவில்லாமல், வீட்டில் வைத்துக்கொண்டு உபயோகிப்பதால், அநேக நன்மைகளை அடையலாம். விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகாவது, மஞ்சளை மனதார ஏற்றுக்கொண்டு, பல பிணிகளை நீக்குங்கள். பணவிரயம், கால விரயம் இருக்காது. மீண்டும் தமிழ் மருத்துவம் வருங்கால சந்ததியினருக்கு உதவட்டும்.

எலுமிச்சம்பழத்தின் மகத்துவம்


எலுமிச்சம்பழத்தின் மகத்துவம்
கடந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை மனிதர்களுக்கு நோய் வராமலும், வந்தால் பேணிப் பாதுகாக்கவும் பயன்படும் ஓர் ஒப்புயர்வற்ற சக்திதான் எலுமிச்சம்பழம். இதன் மருத்துவ குணமும், உணவின் உபயோகமும் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விஷயமாகும்.

காலப் போக்கில் விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு பல உண்மைகள் விஞ்ஞானிகளை வியப்பிலாழ்த்தி வருகிறது. 1875 ம் ஆண்டில் டாக்டர் ப்ளென் தனது ஆய்வின் முடிவில் எலுமிச்சம் பழம் ரத்தத்தைத் து}ய்மை செய்துள்ளதை உலகுக்கு உணர்த்தினார்.


சர் ராபர்ட் மைக்கேரியன் என்ற மருத்துவ அறிஞர் காய்ச்சலைப் போக்கும். தடுமன் வராமல் தடுக்கும் என்று வெளியிட்டார். இரண்டாவது உலக யுத்தம் நடந்தபோது போர் வீரர்களுக்கு ஏற்பட்ட ரத்தத்தை உறையவைக்க வேண்டிய மிளாசத்தை எலுமிச்சம் பழத்தில் இருந்து எடுத்து காயங்களை எளிதில் ஆற்றினார்கள். இதன் பின் எலுமிச்சையின் சத்தினை அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இரண்டாவது உலக யுத்தம் நடந்தபோது தெனரான் என்னும் இடத்தில் காகிதத் தயாரிப்புக்குப் பயன்படுத்தினார்கள். எவரெஸ்ட் சிகரத்தைக் கண்டுபிடித்த டென்சிங், ஹிலாரி ஆகிய இருவரும் தங்களுக்கு களைப்பு வரும் போதும் போதுமான பிராணவாயு கிடைக்காத போதும் எலுமிச்சம் பழத்தை உபயோகித்தார்களாம்.


குரங்குகளுக்கு நோய் கண்டால் எலுமிச்சம்பழத்தின் மூலம் டார்வின் சிகிச்சையளிப்பாராம். ஒரு முறை குரங்குகளுக்கு அதிகப்படியான மதுவினைக் குடிக்கச் செய்து சிறிது நேரம் கழித்து பல வகையான பழங்களைத் தின்பதற்கு வைத்தாராம். எந்தப் பழத்தையும் எடுக்காமல் எலுமிச்சம் பழத்தை மட்டிலும் கடித்து சாறு குடித்ததாம். டார்வின் ஆய்வு நூலில் இவ்விதம் கூறப்படுகிறது. அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு ஆகியவற்றின் கதிர் இயக்கப் பாதுகாப்புக்கு மருந்தாய்வு செய்கிறார்கள். இதில் பயோ ஃப்ளோவின் ஒரு முக்கியமான மருந்து. இந்த பயோ ஃப்ளோவின் என்ற மருந்து எலுமிச்சையின் தோலில் அதிகம் உள்ளது.


இந்த மருந்தை எலிகளுக்குக் கொடுத்து மிகக்கடுமையான எக்ஸ்ரே கதிர்களை எலிகளின் மீது செலுத்தினார்கள். ஆனால் எலிகளுக்கு எந்தவிதபாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். புற்று நோய் உள்ளவர்களுக்கு பயோஃப்ளோ கலந்த மருந்தைச் செலுத்தி எக்ஸ்ரே கதிர் சிகிச்சையளித்தார்கள். எக்ஸ்ரே கதிர்கள் மனிதர்களை பாதிக்கவில்லை என்று கண்டுபிடித்தார்கள். நோயாளிகள் கதிர் இயக்கத்தை தாங்கிக் கொண்டார்கள். இனி வருங்காலத்தில், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள கதிர் இயக்கப் பாதுகாப்புக்கு மருந்துகள் வந்துவிடும். லெமன் பெக்டின் என்ற மருந்து காயங்களின் மேல் பூசினால் ரத்தப் பெருக்கு நிறுத்தப்படுவதைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.


இதன் பயனாக ஹோமோ ஃபிலியா நோயாளிகளின் காயத்தால் ஏற்படும் ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சிட்ரிக் ஆசிட்டின் மருத்துவ குணம் எல்லோருக்கும் தெரியும். முக்கியமாக கிருமிகளைக் கொல்லக் கூடியது. லெமன் பெக்டேட் என்ற எலுமிச்சை உப்பு ஆழ்துளை மூலம் எண்ணெய் எடுக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த உப்பு பூமிக்கு அடியில் உள்ள கால்ஷியத்துடன் வினை புரிந்து எண்ணெய் வெளிவர உதவி செய்கிறது. இரும்பு கடினமானது. மேலும் கடினமாக்குவதற்கு எலுமிச்சையிலிருந்து எடுக்கப்படும் சத்துப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. நமது அன்றாட வாழ்வில் எலுமிச்சம் பழத்தை எப்படி பயன்படுத்தலாம்? புளிப்புச்சுவையான எலுமிச்சம் பழச்சாறு நாம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் காரத்தன்மையாக மாறிவிடும். பல நன்மைகள் ஏற்பட உதவும்.


எலுமிச்சம் பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், சிட்ரிக் ஆசிட், வைட்டமின் சி ஆகியவையும் எலுமிச்சம் பழத் தோலில் மாவுப்பொருள், புரதம், கொழுப்புப் பொருள் ஆகியவையும் இருக்கின்றன. பெரிய மனிதர்களைச் சந்திக்க மகிழ்விக்க ஒரு எலுமிச்சம் பழம் போதுமானது. சுபகாரியங்களுக்கும், கோவில் அர்ச்சனைக்கும் மந்திரவாதிகளுக்கும் எலுமிச்சை தேவை. உணவுப்பொருளில் சேரும்போது இதன் சத்துப் பொருள் உணவில் சேர்வதோடு நல்ல மணமும் ருசியும் கிடைக்கிறது. லைம் ஜூஸ் கிளிசரின் தைலத்தை தேய்த்துக் குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். இதற்கு வெறும் எலுமிச்சம் பழச்சாறைக்கூட உபயோகிக்கலாம். கல்லீரலைப் பாதுகாப்பதில் இதற்கு ஈடான பழங்களே இல்லை. எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும்.


நல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும். எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீர் சமம் கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும். எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.500 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.


பேதி மருந்து சாப்பிட்டு, பேதி நிற்காவிட்டால் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட வேண்டும். தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சம் பழத் துண்டை வைத்து தேய்த்தால் தேள் விஷம் குறையும். இதில் உள்ள டார்ட்டாரிக் அமிலச் சத்துதான் இதற்குக் காரணம். வெயிலில் வேலை செய்தல், இரவுப்பணியில் கண் விழித்தல் காரணமாக ஏற்படும் நீர்க்குத்தல், நீர் எரிச்சல் ஆகியவற்றிற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் தண்ணீர் கலந்து சாப்பிட்டாலே போதுமானது. வெட்டைச் சூடு தணிய அம்மான் பச்சரிசி இலையை அரைத்து ஒரு எலுமிச்சம்பழச் சாறும் சிறிய அளவு நீராகாரத் தண்ணீரில் கலந்து மூன்று தினங்கள் சாப்பிட்டால் நோய் நீங்கும். மலச்சிக்கல் நோய் ஆரம்ப நிலையில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றில் சிறிது சோற்றுப்பு கலந்து பருகினால் போதுமானது. மூன்று நாட்கள் காலை வேளையில் சாப்பிட வேண்டும்.


சூட்டு இருமலுக்கு ஒரு எலுமிச்சம்பழச்சாறும் சமபாகம் தேனும் கலந்து, காலை மாலை சாப்பிட வேண்டும். பித்த மயக்கம் வருபவர்கள் இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றில் 25 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து காலை வேளையில் சாப்பிட்டால் பித்த மயக்கம் தீரும். மூத்திரப்பை சுத்தம் அடைய தினமும் எலுமிச்சம் பழச்சாறு கலந்த தண்ணீர், மோர், ரசம் இவற்றைச் சாப்பிட்டால் மூத்திரப்பைக் கோளாறுகள் அனைத்தும் விலகிவிடும். சிறுநீர் எரிச்சலை உடனே நிறுத்தும். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் காட்டுச் சீரகம் என்ற மருந்தை நன்றாக மைபோல அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்தால் சாந்துப் பதம் வரும். இதைத் தலையில் நன்றாகத் தேய்த்து சிறிதுநேரம்வைத்திருந்து தலை முழுகினால் தலையில் உள்ள பொட்டு, பொடுகு, பொருக்கு முதலானவை சிலமுறை உபயோகத்தில் மாறிவிடும்.


தலையில்பேன் உள்ளவர்கள் மயிர்க்கால் வரை நன்கு அழுத்தித்தேய்த்து நன்றாக ஊறிய பின் தலை முழுகினால் பேன்கள் இறந்துவிடும். தலைமயிர் சுத்தமாகும். எலுமிச்சம் பழச்சாற்றில், காட்டுச் சீரகத்தை சாந்துபோல் அரைத்து சொரி, சிரங்குகளுக்குப் போட்டால் நோய் நீங்கும். சொரி, சிரங்குகள் நீடித்த நாட்களாக இருப்பவர்கள் பழச்சாற்றில் சீனி கலந்து பகல் வேளையில் தொடர்ந்து சாப்பிட வேண்டும். தேமல் நோய் உள்ளவர்கள் பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசி வந்தால் தேமல் மறையும். உடலில் தேய்த்து 8மணி நேரம் வைத்திருந்து சுடுநீரில் குளிக்க வேண்டும். முகப்பரு உள்ளவர்கள் தினம் ஒரு எலுமிச்சம்பழச்சாறு உள்ளுக்குச் சாப்பிட்டு, இரவு படுக்கும் போது பழச்சாற்றை மேலுக்குப் பூசி வந்தால் முகப்பரு மறைந்து விடும்.


திரிகடுகு சு10ரணத்தில் சற்றுக் கூடுதலாக எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு ஓரளவிற்கு சீனியும் சேர்த்து ஒரு மண் கலயத்திலிட்டு நன்றாக மூடி சீலை மண் செய்து ஒரு அடி ஆழத்தில் மண்ணில் புதைத்து ஆறுவாரங்கள் சென்ற பின் எடுத்து எலுமிச்சை நீரை மட்டும் வடிகட்டி வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வந்தால் சாதாரண மருந்துகளுக்கு கட்டுப்படாத அஜீரணம், பசியின்மை, வாய்வு வலிகள், கை, கால் உளைச்சல் நரம்புத்தளர்ச்சி, ரத்த சோகை முதலிய வியாதிகளைப் போக்கிவிடும். இது கை கண்ட மருந்தாகும். இதோ ஒரு இனிப்பான செய்தி... எலுமிச்சையில் இருந்து ஸ்குவாஷ் செய்து தினம் சாப்பிடுங்கள்.


எலுமிச்சம் பழச்சாறு 1 கிலோ, சர்க்கரை 2 கிலோ இந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சம் சாற்றை வடிகட்டவேண்டும். சர்க்கரையை தண்ணீரில் பாகுபதம் வரும் வரை காய்ச்ச வேண்டும், அடுப்பை விட்டு எடுத்து பாகில் பழச்சாற்றைச் சேர்த்து வைத்துக் கொண்டு தினமும் சாப்பிடலாம். நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டுமானால் ஒரு கிலோ பழச்சாற்றுக்கு 700 மில்லி கிராம் பொட்டாசியம் பெட்டாபை சல்பேட் கலந்து வைத்துக் கொள்ளலாம்.

நன்றி http://tamilcnn.com/

செம்பருத்தியின் மருத்துவக் குணம்


செம்பருத்தியின் மருத்துவக் குணம்

செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மட்டுமல்ல... வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான். இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி. இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும். உடல் உஷ்ணம் குறைய... உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு.


இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம். வெட்டை நோய் குணமாக... ரகசிய வியாதிகளின் பிரிவைச் சேர்ந்த வெட்டை நோயை செம்பருத்திப் பூ குணமாக்குகிறது. இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும்.


இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும். இருதயம் பலம் பெற... இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது. செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும்.


அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதிலிருந்து காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும். பேன் தொல்லை ஒழிய... சில பெண்களக்கு பேன் பெருந்தொல்லை தரும். இதுபோன்றோர் செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும்.


இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர, பொடுகு, சுண்டுகள் இருந்தாலும் நீங்கிவிடும். குழந்தையின் வளர்ச்சிக்கு... சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.’’

நன்றி http://tamilcnn.com/

கொழுப்பைக் குறைக்கும் தேங்காய்!


கொழுப்பைக் குறைக்கும் தேங்காய்!

தேங்காயில் உள்ள "பேட்டி ஆசிட் " (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.உடல் எடையைக் குறைகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. "தேங்காயில்,தேங்காய் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகம்.அது உடலுக்கு ஆகாது.குறிப்பாக சர்க்கரை நோயாளிகள்,இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக் கூடாது" என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.


"பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று தென்னையையும்,அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாய்ப் போற்றி வருகின்றன. தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச்சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.தென்னையில் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.


தேங்காய்,தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரச்சாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.தேங்காய்,தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று.விருந்து,விழாக்கள்,பண்டிகைகள்,சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதை தான். தேங்காய் மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல,மருத்துவத்தின் அடியாள் சின்னமும் கூட.இந்தியாவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன் வயது எண்பது ஆண்டுகள் முதல் இருநூறு ஆண்டுகள் வரை.விதை வளர்ந்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை "தென்னம்பிள்ளை" என்று அழைக்கிறார்கள்.


தேங்காயில் உள்ள சத்துக்கள்


* புரதச்சத்து

* மாவுச்சத்து

* கால்சியம்

* பாஸ்பரஸ்

* இரும்பு

உள்ளிட்ட தாதுப் பொருட்கள்

* வைட்டமின் *

அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள்

* நார்ச்சத்து

என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்து சத்துக்களும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களில் உள்ள மருத்துவக் குணங்கள் தே ங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.


தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.தேமல்,படை,சிரங்கு போன்ற நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப் போக்குக்கு,தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.வெள்ளைப் படுதலுக்கு தென்னம் பூ மாருந்தாக பயன்படுத்தப்படுகிறது.


தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்கோடு பெருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.தேங்காய் சிரட்டையில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

நன்றி http://tamilcnn.com/

துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். !


துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். !

வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். ! என்ன செய்வது ? அருகில் எளிதில் கிடைப்பதால் அருமை தெரிவதில்லை !


துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, தொடர்பான பிரச்சினைகள் வரவே வராது.! தெரியுதா பெருமாள் கோவிலுக்கு போனால் தீர்த்தம் வாங்க மறக்காதீர்கள் !இன்னும் பாருங்கள் ! துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்கவே அச்சப்படும் ! ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.


குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் நாற்றமா உங்களிடமா ? போயே போச்சு ! சோப்பு கூட துளசியில் செய்கிறார்கள். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசியை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம்.


சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். இன்னும் சமீபத்திய அச்சுறுத்தலான பன்றிக் காய்ச்சலை துளசி குணப்படுத்தும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுவதாக செய்திகள் கூறிகின்றன . மூலிகைச் செடியான துளசி, பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.


அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் திறமையும் அதற்கு உண்டாம். இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவ நிபுணரான டாக்டர் யு.கே. திவாரி கூறுகையில், துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு. எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு.


வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. ஜாப்பனீஸ் என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு. நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு. பன்றிக் காய்ச்சல் வந்தவர்களுக்கு துளசியை உரிய முறையில் கொடுத்தால் அது விரைவில் குணப்படுத்தி விடும். உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையையும் அது பலப்படுத்தும் என்கிறார் திவாரி.


டாக்டர் பூபேஷ் படேல் என்ற டாக்டர் கூறுகையில், துளசியால் பன்றிக் காய்ச்சலை வராமல் தவிர்க்க முடியும். 20 அல்லது 25 புத்தம் புதிய துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி அல்லது மை போல அரைத்தோ, வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பன்றிக் காய்ச்சல் குணமாகும். இப்படிச் செய்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பன்றிக் காய்ச்சல் நம்மை அண்டாது என்கிறார்.


நோயின் தன்மை மற்றும் தீவிரத்திற்கேற்ப துளசியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார் படேல். துளசிச் செடிகளின் வகைகளான கிருஷ்ணா (ஓசிமம் சாங்டம்), வானா (ஓசிமம் கிராடிசிமம்), கதுகி (பிக்ரோரிசா குர்ரோவா) ஆகிய நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும் வல்லமை பெற்றவை. துளசியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது என்பதும் முக்கியமான ஒன்று என்கிறார் படேல்.!


நான் சொன்னால் நம்பமாடீர்கள் நம் தாஜ்மகாலை பாதுகாக்க 10 லட்சம் துளசி செடிகள் உதவுகின்றன ! சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டதுளசி செடி, தற்போது தாஜ் மகாலை சுற்றுப்புற மாசுகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.உ.பி.,யின் வனத்துறை மற்றும் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆர்கானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக, காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மகாலைச் சுற்றி 10 லட்சம் துளசி கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஆர்கானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் பொது மேலாளர் கிருஷ் ணன் குப்தா கூறியதாவது: தற்போது வரை 20 ஆயிரம் துளசி கன்றுகள் நடப் பட்டுள்ளன. தாஜ் மகாலுக்கு அருகில் உள்ள இயற்கை பூங்கா மற்றும் ஆக்ரா முழுவதும் துளசி கன்றுகள் நடப்பட உள்ளன.சுற்றுப்புறத்தை தூய் மைப்படுத்துவதற்கான சிறந்த செடிகளுள் ஒன்று துளசி. அதிகளவில் ஆக்சிஜனை வெளியிடும் தன்மை துளசிக்கு உள்ளது.


தொழிற்சாலை மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேறும் மாசுகள் இதனால் குறையும்.இவ்வாறு கிருஷ்ணன் குப்தா கூறினார். தொல்லியல் துறை கண்காணிப்பாளர் தேவிகா நந்தன் திம்ரி கூறுகையில், "துளசி அதிகளவிலான ஆக்சிஜன் வெளியிடும் இது காற்றில் காணப்படும் மாசுகளைக் குறைக்க நிச்சயம் உதவும்.


காற்றை சுத்தப்படுத்துவதன் மூலம், தொழிற்சாலை மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளால் தாஜ் மகாலுக்கு ஏற்படும் பாதிப்பு குறையும்' என்றார். இத்தனை மதிப்பு வாய்ந்த துளசியை இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள், பாவித்தவர்கள் அற்புதமாய் வாழ்ந்திடுவார் பரதேவிதன் அருளால்.! புவியன்பு கொண்டோர் அனைவரும் வீட்டுக்கு ஒரு துளசியும் சில மூலிகைகளும் வீட்டில் வளர்த்தால் வீடு நலம்பெறும் .புவியும் வாழ்த்தும் .

நன்றி http://tamilcnn.காம்/