Vanakkam

வியாழன், 2 மே, 2013

கீரை பொங்கல் 

தேவையானவை:

     அரிசி - 2 டம்ளர்
     பாசி பருப்பு - 1/4 டம்ளர்
     கீரை - 1கட்டு
     மல்லி தழை - சிறிது
     நெய் - தேவையான அளவு
     மிளகு
     முந்திரி
     சீரகம், எண்ணெய் - தாளிக்க
     உப்பு - தேவைக்கு

செய்முறை:

 1. முதலில் கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு வெடித்ததும்        கீரையை போட்டு வதக்கவும்.

3. பிறகு பாசிபருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

4. பின் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு, பொடித்த மிளகு, முந்திரி, நெய் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.

5. சிறிது நேரம் வெந்ததும் மல்லி சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும்.

6. சுவையான கீரை பொங்கல் ரெடி.

குறிப்பு:

பருப்பு சாம்பார் அல்லது தேங்காய் சட்னி தொட்டு கொள்ள மிக சுவையாக இருக்கும்.

                                                                                                                 - கவி மலர்
 
கல்யாண வீட்டில் வைக்கும் சாம்பார்

துவரம் பருப்பை தனியே வேக வைக்கவும். மேலே படிகிற கசடை எடுத்துவிட்டு, நன்கு வேக விடவும்.

புளியைக் கரைத்துத் தனியே கொதிக்க விடவும். கொதித்ததும் அதில் காய்கறிகள் (பூசணிக்காய், அவரைக்காய் என விருப்பமான காய் அல்லது எல்லாம் கலந்தது), பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.

காய் வெந்ததும் அதில் தனியா, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெந்தயம், பெருங்காயம், சீரகம் எல்லாவற்றையும் சிறிது எண்ணெயில்சிவக்க வறுத்து அரைத்து சேர்க்கவும்.

கொதிக்கும் போது வெந்த பருப்பையும் சேர்த்து கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டவும். விருப்பப் பட்டால் துளி வெல்லம் சேர்க்கலாம்.

கடைசியாக கொஞ்சம் சின்ன வெங்காயத்தை நன்கு வதக்கி, கொதிக்கிற சாம்பாரில் கொட்டினால் கல்யாண சாம்பார் மணக்கும்.
                    
                                                                                                                  - கவி மலர்